வெள்ளி, 12 மார்ச், 2010

சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார் .